உதகை: முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, உதகை - மஞ்சூர் சாலையில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு தற்போது ஒரு லட்சத்து 15ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே கோடை சீசன் என்பதால், தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment